பூவே
அந்த வானம் உனக்காக
அதில் தவழும் மேகங்கள் உனக்காக
பூக்கள் உனக்காக
அதில் சுரக்கும் தேனும் உனக்காக
அந்த மணல்வெளி உனக்காக
அதில் நான் கட்டிய சிறு வீடுகள் உனக்காக
ஆற்றோர ஆலமர
விழுதுகளில் - நான் கட்டிய
ஊஞ்சலும் உனக்காக
இரவு நேர விண்மீன்கள் உனக்காக
அதை மெத்தையாக்கிடுவேன் உனக்காக
முழு நிலவெடுத்து - அதை
முகம் பார்க்கும்
கண்ணாடியாக்குவேன் உனக்காக
என்னுடல் வெறும் கூடுதான்
அதில் உள்ள கடைசி
மூச்சுக்காற்றும் உனக்காகவே தான்....