அன்று மாரி கால மாழைப்பொழுது
மழை பெய்து சற்று ஓய்ந்திருந்தது - ஆனால்
இலைகளில் இருந்து விழும்
மழைத்துளிகள் மட்டும் நிற்கவில்லை இன்னும்
வாசலில் நின்றுகொண்டிருந்த என்னை
சில்லென்று உரசிய காற்று - என்
உண்ர்வுகளையும் உரசிவிட்டு சென்றது
அவளுடன் நான் பழகிய அந்த
ஒவ்வொரு நிமிடங்களும் - என்னில்
இன்றும் ஈரமாய் உள்ளது
அவள் என்னுடன் அமர்ந்திருந்நது பேசிய
ஒவ்வொரு வார்த்தைகளும் - என் நினைவில்
இன்னும் உயிருடன் இருக்கின்றது
என்னை ஏக்கத்துடன் பார்க்கும்
அந்த விழிகள் இரண்டும் - என்
விழிகளில் நிழலாய் தெரிகின்றது
எனக்காக மட்டும் உயிர் வாழ்ந்த
அந்த இதயம் - இன்று
என்னை விட்டு விலகியது ஏனோ?
இவ்வுலகை விட்டு உன் உயிர்
போகும் போதாவது - நீ
என்னையும் கூட்டிச்சென்றிருக்கலாமே