Sunday, 2 March 2008

இனியும் வேண்டாம் ..............

அன்று மாரி கால மாழைப்பொழுது

மழை பெய்து சற்று ஓய்ந்திருந்தது - ஆனால்

இலைகளில் இருந்து விழும்

மழைத்துளிகள் மட்டும் நிற்கவில்லை இன்னும்


வாசலில் நின்றுகொண்டிருந்த என்னை

சில்லென்று உரசிய காற்று - என்

உண்ர்வுகளையும் உரசிவிட்டு சென்றது


அவளுடன் நான் பழகிய அந்த

ஒவ்வொரு நிமிடங்களும் - என்னில்

இன்றும் ஈரமாய் உள்ளது


அவள் என்னுடன் அமர்ந்திருந்நது பேசிய

ஒவ்வொரு வார்த்தைகளும் - என் நினைவில்

இன்னும் உயிருடன் இருக்கின்றது


என்னை ஏக்கத்துடன் பார்க்கும்

அந்த விழிகள் இரண்டும் - என்

விழிகளில் நிழலாய் தெரிகின்றது


எனக்காக மட்டும் உயிர் வாழ்ந்த

அந்த இதயம் - இன்று

என்னை விட்டு விலகியது ஏனோ?


இவ்வுலகை விட்டு உன் உயிர்

போகும் போதாவது - நீ

என்னையும் கூட்டிச்சென்றிருக்கலாமே