பறவையே
நீ எங்கோ சிறைவைக்கப்பட்டிருக்கிறாய்
உன் அழுகைகள் மட்டும்
கேட்கின்றது எனக்கு - ஆனால்
தேடி வருவதற்கு
ஏதும் தடயங்களில்லை
எம்மை யார் சந்திக்கவைத்தது
எம்மை எது காதல்கொள்ளவைத்தது
இதற்கு காரணமான அந்த
விதியை விட்டுவிட்டு
ஏன் உன்னை சிறையிலிட்டார்கள் ?
கற்சுவர்களுக்குள் அடைபட்டு
பூ போன்ற உன் மேனி
வாடிப்போய்விட்டதா?
பஞ்சு போன்ற உன் பாதங்கள்
பாறையாகிவிட்டதா?
வீணையின் தந்திகளை தடவிய
உன் மெல்லிய விரல்கள்
அந்த சிறைக்கம்பிகளைத் தடவுகின்றதா?
நாம் மனதால் சிறைபட்ட
போதும் வலிக்கவில்லையடி எனக்கு
இன்று உன்னை பிரிந்து
தவிக்கையில் நெருப்பில் இருப்பது போல்
இருக்குதடி எனக்கு
நாம் காதலித்தது
என்ன குற்றமா?
நாம் சேர்ந்து வாழநினைத்தது
என்ன தவறா?
ஏன் இத்தனை துன்பங்கள்
எம்மைச்சுற்றி?
இவை மறையுமன்று
உன் விழி பார்தது
கட்டிக்கொண்டு அழவிருக்கும்
அந்த நொடிக்காக ஏங்குதடி
என் மனம் தனியாக.........