Sunday, 30 March 2008

உனக்காக....

பூவே
அந்த வானம் உனக்காக
அதில் தவழும் மேகங்கள் உனக்காக
பூக்கள் உனக்காக
அதில் சுரக்கும் தேனும் உனக்காக

அந்த மணல்வெளி உனக்காக
அதில் நான் கட்டிய சிறு வீடுகள் உனக்காக
ஆற்றோர ஆலமர
விழுதுகளில் - நான் கட்டிய
ஊஞ்சலும் உனக்காக

இரவு நேர விண்மீன்கள் உனக்காக
அதை மெத்தையாக்கிடுவேன் உனக்காக
முழு நிலவெடுத்து - அதை
முகம் பார்க்கும்
கண்ணாடியாக்குவேன் உனக்காக

என்னுடல் வெறும் கூடுதான்
அதில் உள்ள கடைசி
மூச்சுக்காற்றும் உனக்காகவே தான்....

காத்திருப்பேன்.......

பறவையே
நீ எங்கோ சிறைவைக்கப்பட்டிருக்கிறாய்
உன் அழுகைகள் மட்டும்
கேட்கின்றது எனக்கு - ஆனால்
தேடி வருவதற்கு
ஏதும் தடயங்களில்லை

எம்மை யார் சந்திக்கவைத்தது
எம்மை எது காதல்கொள்ளவைத்தது
இதற்கு காரணமான அந்த
விதியை விட்டுவிட்டு
ஏன் உன்னை சிறையிலிட்டார்கள் ?

கற்சுவர்களுக்குள் அடைபட்டு
பூ போன்ற உன் மேனி
வாடிப்போய்விட்டதா?
பஞ்சு போன்ற உன் பாதங்கள்
பாறையாகிவிட்டதா?
வீணையின் தந்திகளை தடவிய
உன் மெல்லிய விரல்கள்
அந்த சிறைக்கம்பிகளைத் தடவுகின்றதா?

நாம் மனதால் சிறைபட்ட
போதும் வலிக்கவில்லையடி எனக்கு
இன்று உன்னை பிரிந்து
தவிக்கையில் நெருப்பில் இருப்பது போல்
இருக்குதடி எனக்கு

நாம் காதலித்தது
என்ன குற்றமா?
நாம் சேர்ந்து வாழநினைத்தது
என்ன தவறா?
ஏன் இத்தனை துன்பங்கள்
எம்மைச்சுற்றி?

இவை மறையுமன்று
உன் விழி பார்தது
கட்டிக்கொண்டு அழவிருக்கும்
அந்த நொடிக்காக ஏங்குதடி
என் மனம் தனியாக.........

Sunday, 2 March 2008

இனியும் வேண்டாம் ..............

அன்று மாரி கால மாழைப்பொழுது

மழை பெய்து சற்று ஓய்ந்திருந்தது - ஆனால்

இலைகளில் இருந்து விழும்

மழைத்துளிகள் மட்டும் நிற்கவில்லை இன்னும்


வாசலில் நின்றுகொண்டிருந்த என்னை

சில்லென்று உரசிய காற்று - என்

உண்ர்வுகளையும் உரசிவிட்டு சென்றது


அவளுடன் நான் பழகிய அந்த

ஒவ்வொரு நிமிடங்களும் - என்னில்

இன்றும் ஈரமாய் உள்ளது


அவள் என்னுடன் அமர்ந்திருந்நது பேசிய

ஒவ்வொரு வார்த்தைகளும் - என் நினைவில்

இன்னும் உயிருடன் இருக்கின்றது


என்னை ஏக்கத்துடன் பார்க்கும்

அந்த விழிகள் இரண்டும் - என்

விழிகளில் நிழலாய் தெரிகின்றது


எனக்காக மட்டும் உயிர் வாழ்ந்த

அந்த இதயம் - இன்று

என்னை விட்டு விலகியது ஏனோ?


இவ்வுலகை விட்டு உன் உயிர்

போகும் போதாவது - நீ

என்னையும் கூட்டிச்சென்றிருக்கலாமே