Wednesday, 7 October 2015
நாட்குறிப்பில் இருந்து....
வெறுமையாக புரட்டிக்கொண்டிருந்த என் நாட்குறிப்பின் பக்கங்கள் அவளை அந்த நொடி கண்டிருக்காமல் போயிருந்தால் இன்னும் வெறுமையாகவே இருந்திருக்கும்.
உன் ஒரு நொடி வருகை என் பக்கங்களை இன்னும் நிறைத்துக்கொண்டிருக்கிறது, இன்பம், துன்பம், தோல்வி, அழுகை என எதோ ஒன்றை இன்னும் கிறுக்கிக்கொண்டிருக்கிறது.
11/11/10 உன்னுடன் பல நாட்கள் பழகியிருந்தாலும், அன்று மட்டும் ஏனோ என் கண்களுக்கு அழகாக தெரிந்தாய். என்னுள் நீ வர போகிறாய் என் வாழ்வையே மாற்ற போகிறாய் என்று தெரியவில்லை எனக்கு. இருந்தாலும் உன்னை பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என்னையும் அறியாமல்.
நானும் கவிதை சொன்னேன் உன்னை நினைத்து என்னுள். பொருளும் இல்லை ஒன்றும் இல்லை, ஆனாலும் இதமாக இருந்தது அந்த கவிதை எனக்கு. உன்னை பார்ப்பதற்கு என்றே நீ செல்லும் இடமெல்லாம் எதேச்சையாக வருவது போல் நடித்தேன், உள்ளே பயந்தாலும் ஓர் இனம் புரியாத உணர்வு புதிராகவே இருந்து...
பக்கங்கள் வரும்...