ஒன்றாக இருந்த
எம் நிழல்கள் - இன்று
பிரிந்து என் நிழல்
மட்டும் போகிறது
என் சாலை வழியே....
அங்கு கொட்டி கிடக்கும்
மலர்கள் கூட
ஏங்குகிறது - உன்
பாதங்கள் பட்டு
மோட்சம் பெற....
நாம் ரசித்த ஒவ்வொரு
காட்சியும் -என்னை
தனிமையில் கண்டதும்
உன்னை பற்றி
என்னிடம் கேட்கின்றன....
நானும் கேட்கின்றன்...
அவளுக்காக என்
ஆயுள் முழுவதும்
காத்திருப்பேன் - அவளை
மீண்டும் என்னிடம்
அனுப்பும் வரை...
என்று அந்த " விதியிடம்"....