Monday, 25 February 2008

கல்லறைப் பூ

என் விழிகளில் நீ விழுந்ததும்
நான் இன்று பிறந்த குழந்தை
என்றே குதுகலித்தேன்

என் அருகில் நீ வருகையில்
வருடங்கள் அனைத்தும்
நிமிடமென மாறுவதை உணர்ந்தேன்

உன் பாதம் என்மேல்பட்டதும்
புரிந்தது நான் உன்னை
அலங்கரிக்க வந்த பூவல்ல - நானும்
ஓர் கல்லறைப் பூவென.....