Tuesday, 26 February 2008

நினைவுகளில்

நீ என்னோடு பேசிச்சென்ற
ஒவ்வொரு வார்த்தையும்
மனதில் நிலையாய் நிற்கின்றது

நீ என்னோடு வாழ்ந்த
அனைத்து நாட்களும் - என்
வாழ்வில் இனிதாய் இருக்கின்றது

உன் விரல்பட்ட
என் தேகம் - இன்னும்
உனக்காக ஏங்குகின்றது

என்றாவது நீ வருவாய் என
காத்துக்கிடக்கின்றது என் இதயம்
இதமான அந்த நினைவுகளில்........