ஓசைகளை மட்டும் தான்
கேட்கின்றேன் - அது வரும்
திசை தெரியாமல்
முட்டி மோதி திரிகின்றேன்
நான் போகும்வழி தெரியாமல்
இரவுகளில் மட்டும் வாழ்கின்றேன்
விடியலைக் காணாத - ஓர்
விட்டில் பூச்சியாக.... --
Friday, 29 February 2008
Tuesday, 26 February 2008
நினைவுகளில்
நீ என்னோடு பேசிச்சென்ற
ஒவ்வொரு வார்த்தையும்
மனதில் நிலையாய் நிற்கின்றது
நீ என்னோடு வாழ்ந்த
அனைத்து நாட்களும் - என்
வாழ்வில் இனிதாய் இருக்கின்றது
உன் விரல்பட்ட
என் தேகம் - இன்னும்
உனக்காக ஏங்குகின்றது
என்றாவது நீ வருவாய் என
காத்துக்கிடக்கின்றது என் இதயம்
இதமான அந்த நினைவுகளில்........
ஒவ்வொரு வார்த்தையும்
மனதில் நிலையாய் நிற்கின்றது
நீ என்னோடு வாழ்ந்த
அனைத்து நாட்களும் - என்
வாழ்வில் இனிதாய் இருக்கின்றது
உன் விரல்பட்ட
என் தேகம் - இன்னும்
உனக்காக ஏங்குகின்றது
என்றாவது நீ வருவாய் என
காத்துக்கிடக்கின்றது என் இதயம்
இதமான அந்த நினைவுகளில்........
Monday, 25 February 2008
கல்லறைப் பூ
என் விழிகளில் நீ விழுந்ததும்
நான் இன்று பிறந்த குழந்தை
என்றே குதுகலித்தேன்
என் அருகில் நீ வருகையில்
வருடங்கள் அனைத்தும்
நிமிடமென மாறுவதை உணர்ந்தேன்
உன் பாதம் என்மேல்பட்டதும்
புரிந்தது நான் உன்னை
அலங்கரிக்க வந்த பூவல்ல - நானும்
ஓர் கல்லறைப் பூவென.....
நான் இன்று பிறந்த குழந்தை
என்றே குதுகலித்தேன்
என் அருகில் நீ வருகையில்
வருடங்கள் அனைத்தும்
நிமிடமென மாறுவதை உணர்ந்தேன்
உன் பாதம் என்மேல்பட்டதும்
புரிந்தது நான் உன்னை
அலங்கரிக்க வந்த பூவல்ல - நானும்
ஓர் கல்லறைப் பூவென.....
Subscribe to:
Comments (Atom)